நீ செல்லமாய்
சிணுங்குவதை கூட
செல்போனில்
டோனக்க ஆசை !
தூக்கத்தின்
முனங்களெல்லாம்
புது மொழி
ஒன்றில் சேர்த்து விட ஆசை!
வாடாத
மல்லிகைக்கும் உன் காதோர
குழலுக்கும்
கழகமூட்ட ஆசை !
கடைசியில்
நானே நடுவராய் வந்து
உனக்கே வெற்றி
மாலை சூட ஆசை !
காட்டு குள
தாமரையை
கை தவழ
எடுத்து வந்து
உன்னருகே
வைத்து - அதை
உருக வைக்க
ஆசை !
என்
நெஞ்சமெல்லாம் நீ இருக்க
உன்
நெஞ்சணையில் கொஞ்ச நேரம்
தஞ்சம் கொள்ள
ஆசை !
0 Comments:
Post a Comment