குழந்தைப் பாசம்


 பார்த்த நொடியில் அனைவரையும் ஈர்க்கும் வல்லமை கொண்டவர்கள் குழந்தைகள். அதற்கு அவர்களின் குழந்தைத்தனம்குணம்விளையாட்டாய் செய்யும் செயல்கள்பேசும் மழலைக் குரல்சுத்தமான அன்புஎதையும் எதிர்பார்க்காத பாசம். குழந்தைகளை விட அவர்களிடம் குழந்தைதனமாய் விளையாடும் பெற்றோர்களின் செயல் பார்க்க மிக அழகாய் இருக்கும்.அந்த குழந்தை வளர்ந்து ஆளான பின்பும் அவர்களிடம் குழந்தை தனமாய் பேசும்- விளையாடும் பெற்றோர்களை பார்க்கும் பொது என் மனம் லயித்து கிடக்கும்.

 
சென்னை டு பாண்டி செல்லும் பேருந்தில் நான் அமர்ந்திருந்த எதிர் பக்கம் ஒரு குடும்பத்தினர் பயணம் செய்தனர். முன் இருக்கையில் அப்பாவும் அம்மாவும்பின் இருக்கையில் அவர்களின் இருபது வயதை ஒத்த பெண் குழந்தைகள். அந்த அப்பா கையை பின்புறம் கட்டியவாறு இருக்கையின் மேல் வைத்திருந்தார். பின்னல் இருந்த அந்த பெண் குழந்தை அவரின் உள்ளங்கையில் கைவைபதும்அவர் கையை மூடி அந்த பெண்ணின் கையை பிடிக்க முயற்சியுமாய் அந்த சிறுபிள்ளை விளையாட்டு பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தது.

 
ஒரு தாயின் பாசம் அதையும் தாண்டி என்னை பிரமிக்க வைத்தது. நண்பனுக்காக டீ கடையில் காத்திருக்கிறேன்பக்கத்தில் ஒரு 40 வயதை தாண்டிய பெரியவர். அந்த வழியே கடந்து சென்ற 75 வயது மதிக்க தக்க ஒரு பாட்டி திரும்பி பார்த்ததும் மிகுந்த சந்தோசத்துடன் எங்களை நோக்கி நடந்து வந்தார். என் பக்கத்தில் இருந்த அவர் வாம்மா எப்டி இருக்க என்று கேட்டு முடிக்க,அந்த அம்மா அவரின் தலையை கோதிக்கொண்டே " சாப்டியாப்பா ? ஏன் சவரம் பண்ணலபாருமுகம் சோகமா தெரியுதுஇந்தா நூறு ரூபா மூத்தவன் கொடுத்தான் வச்சுக்கோ கொழந்த - இளையவள் வீட்டுக்கு போயிட்டு வர்றேன்" - சொல்லிக்கொண்டே முகத்தை தடவி பார்த்துவிட்டு பாட்டி சென்றார். கொஞ்ச நேரம் கழித்து பக்கத்தில் இருந்தவரின் கண்ணில் துளியை பார்த்ததும் சற்று பிரமித்து போனேன். என்னே குழந்தை பாசம்!!!


கொல்லுதே மழைக்காலம்


வெயில கூட தாங்கிடலாம் .. ஆனா இந்த மழைக்காலத்துல அப்பப்பா.. ன்னு கிராமத்துல சலிச்சுக்கிற நிறைய பேர பாத்துருக்கேன், இதையெல்லாம் அவங்க சொல்றது அடைமழைக்காலத்துல. ஆனா சென்னையில சும்மா கால் மணிநேரம் தூறல் தூறினாலும் .. முடியலடா சாமி .. சென்னைக்கும் தண்ணிக்கும் ஆகாது போல.குடிக்கிற தண்ணிய இருந்தாலும் சரி , கொட்டுற மழையா இருந்தாலும் சரி . ரெண்டுமே கஷ்டம்.

 சென்னையில சாதாரண நாட்களிலே வாகன நெரிசல் பத்தி கேக்கவே வேண்டாம் . மழைக்காலத்தில் எறும்பு கூட்டம் போல் அல்லவே நகர்கிறது. எல்லாரும் சொல்லற மாதிரி குண்டும் குழியுமான சாலைஎன்பாதால் மழைநீர் நிரம்பும் காலங்களில் எது குண்டு எது குழி என்று தெரியாததால் வண்டியை வேகமாக நகர்த்த நமது ஓட்டுனர்கள் பயப்படுவது ஒரு காரணம். அடுத்த ஸ்டாப்பில் இறங்க அரைமணி நேரம் ஆகுதுன்ன பாத்துக்குங்க.

அப்புறம் நம்ம பாதசாரிகள் , பேருந்துல கஷ்டப்பட்டு கீழ இறங்கி நடக்கணும்ன்ன கையில் ஒரு ஊன்றுகோல் இல்ல எதாச்சும் படகு வேணும் கடக்க. சுற்றிலும் தண்ணீர் - தீவில் விடப்பட்டது போல காட்சி. எங்க கால் வச்ச எவன் வெட்டுன குழி இருக்குமோன்னு பயம். இதெயெல்லாம் மீறி நடந்து போன எதோ நேத்திகடன் மாதிரி சேறை வாரி உடம்பில் அடித்துவிட்டு செல்வார்கள் நம்ம ஓட்டுனர்கள்.

 இன்னும் எவ்வளவோ கஷ்டம் , மழை நீர் வடிய வடிகால் இல்லாதது எவ்ளோ கஷ்டம்,இருக்குற வடிகாலையும் சிலர் குப்பைதொட்டி ஆக்கினதால எவ்ளோ கஷ்டம்,குளிப்பான கடையில கைய குத்த வச்சு உக்கந்துருப்பவர் - 500 இளநீர்களை சாலையோரம் போட்டுவிட்டு விரக்தியான முகத்துடன் குடையை பிடித்து கொண்டிருக்கும் பெண், சாலை ஓரமே வீடாய் நினைத்து அங்கேயே சமைத்து அங்கே உறங்கும் மக்கள் என இங்கு வாழும் அனைவருக்கும் எவ்வளவு கஷ்டம் மழைக்காலம் என்றால்.

 மழை தவிர்க்க முடியாத , தவிர்க்க பட கூடாத ஒன்றுதான். ஆனா இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டியது. மழைக்காலத்துல வேளச்சேரி,தரமணி பக்கம் போயிட்டு வாங்க.என்ன கொடுமை சார் ன்னு உங்க தலையில நீங்களே அடிச்சுகுவீங்க...அங்க இருக்குற குழந்தைகள் rain rain go away -ன்னு பாடின சரின்னுதான் தோணுது.