நான் நாத்திகன் ஏன்? - பகுத்தறிவாளன் பகத்சிங்


பகத்சிங் ஒரு மாவீரன் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த பகுத்தறிவாளன் என்பதை பகத்சிங் சிறை வாசத்தின் போது எழுதி தந்தையிடம் அனுப்பி வைத்த பகுத்தறிவு சிந்தனைகளை தமிழில் ப.ஜீவானந்தம் என்பவர் மொழிபெயர்த்த 'நான் நாத்திகன் ஏன்? என்ற புத்தகத்தை படிக்கும் பொது உணரமுடியும்.

இன்று கூட கடவுள் மறுப்புக் கொள்கைகளை பேசுபவர்களை அகங்காரம் பிடித்தவன். தற்பெருமைக்காக நாத்திகம் பேசுகிறான் என்பார்கள். இதை உணர்ந்த பகத்சிங் கடவுளை மறுக்கும் காரணங்களை விவாதிக்கும் முன்னர் தனக்கு அகங்காரமோ, தற்பெருமையோ இல்லை என்கிற நிலையை அழகாய் விளக்குகிறார்.

"என்னுடய பாட்டனார் தீவிரமான ஆத்திகவாதி. என்னுடைய தந்தை சுதந்திர கருத்துக்களை தீவிரமாக பேசினாலும் கடவுளை முழுதாய் நம்புபவர். எனக்கும் மதம்,சம்ப்ரதாயங்கள் இவற்றில் நம்பிக்கை இல்லை என்றாலும் கடவுள் ஒருவர் இருப்பதை நம்பினேன்.

இப்படி ஒரு ஆத்திகவாதி அகங்காரம் காரணமாக கடவுள் நம்பிக்கையை விட முடியுமா?

அப்படி மறுத்தால் அதற்க்கு இரண்டு காரணம் இருக்கலாம்.

1. கடவுளை பரம விரோதியாய் எண்ண வேண்டும். இல்லையென்றால்

2 தானே கடவுள் என்று எண்ண வேண்டும்.

இந்த இரு கருத்துக்களையும் உடையவர்களை நாத்திகர்கள் என்று சொல்ல முடியாது.முதலாவது கடவுளை விரோதியாய் பார்ப்பவன் கடவுள் ஒருவன் இருபதாய் நம்புகிறான். இரண்டாவது - தான் கடவுள் என்று சொல்லுவதால் மனிதர்களை மீறிய ஒரு சக்தி பிரபஞ்சத்தை இயக்குவதாக நம்ப வேண்டும். ஆதலால் இவர்கள் இருவருமே நாத்திகர்கள் இல்லை.

நான் இவர்கள் இருவரையும் சார்ந்தவன் இல்லை. கடவுள் இருக்கிறார் என்பதையே அடியோடு மறுப்பவன்.

மறுப்பதற்கு காரணம்?:

"நான் புரட்சி இயக்கத்தில் சேர்ந்த பொழுது, இயக்கத்தில் இருந்த பலர் நாத்திக கருத்துக்களை உடையவர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் ஆயுள் கைதியாய் சிறைவாசம் இருந்த பொழுது ஜெபிக்க எழுந்த ஆர்வத்தை அவர்களால் அடக்க முடியவில்லை. இயக்கத்தின் முழுப்பொறுப்பும் என்னிடம். அதுவரை வெறும் புரட்சிக்காரனாய் இருந்த நான் மார்க்கசின் பொதுவுடைமை நூல்களை கற்றேன். ஏகாதிபத்திய இருளை நீக்கிய லெனின்,ட்ராஸ்கி ஆகியோரின் நூல்கள்ளையும் கற்றேன். குறிப்பாக அராஜக தலைவன் பக்குனின் "கடவுளம் ராஜ்யமும்" நூலையும் , நிர்லம்ப் சாமியால் எழுதப்பட்ட பகுத்தறிவு நூலையும் கற்றதில் கடவுள் இல்லை என்பதில் தெளிவு கொண்டேன். "ஆராய்ச்சித்திறனும் சுயமாக யோசிக்கும் திறனும் புரட்சியாளனின் இரு கண்கள்"- என்கிறார் பகத்சிங்.

கடவுள் உருவான விதம் பகத்சிங் பார்வையில் -

"உலகம் ஏன், எங்கிருந்து உருவானது? உலகத்தின் முற்கால, தற்கால, பிற்கால நிகழ்ச்சிக்கான காரணம் என பல கேள்விகளுக்கு முன்னோர்கள் காரணம் கண்டுபிடிக்க முற்படும்போது சரியான தெளிவு கிடைக்காதால் கடவுள் என்று உருவாக்கப்பட்டு வேதாந்த தத்துவங்கள் உருவாகபட்டன. இது முன்னோர் ஓவ்வொருவரின் சொந்த கருத்துக்கள் என்பதால்தான் மதத்துக்கு மதம் கருத்தக்களில் பல முரண்பாடுகள் இருக்கிறது."

ஆத்திகவாதிகளிடம் பல கேள்விகளை எறிகிறார் பகத்சிங்.

ஆத்திகவாதிகளே,

நீங்கள் நம்புவதுபோல் சர்வவல்லமை படைத்த கடவுள்தான் இந்த உலகை படைத்தார் என்றால் ஏன் இவ்வளவு துயரங்களும், கஷ்டங்களும் நிறைந்த உலகை படைத்தார்? பூரணமாக திருப்தி அடைந்த ஜீவன் ஒன்று கூட இல்லையே ஏன்?

இதை நீங்கள் கடவுள் சித்தம்- ஈசன் இட்ட கட்டளை என்றால் "சட்டத்துக்குள் அடங்குபவன் சர்வசக்தி படைத்தவன் அல்லன்? அவனும் அடிமையாகதனே இருக்க முடியும்?

இதை நீங்கள் கடவுளின் பொழுதுபோக்கு,திருவிளையாடல் என்று தயவு செய்து சொல்லிவிடாதீர்கள். பொழுதுபோக்குக்காக ரோமாபுரியை எரித்து மக்களை துன்பங்களுக்கு ஆளாக்கிய நீரோவுக்கு இவ்வுலகம் சூட்டிய பெயர் கொடுங்கோலன், கேடுகெட்டவன். அப்படியானால் உங்கள் கடவுள் கொடுங்கோலனா?

இறந்த பிறகு மோட்சத்தை அடைய இப்பொழுது உங்கள் கடவுள் பரிசோதிக்கிறாரா? பிற்பாடு மிருதுவான பஞ்சால் காயத்தை ஆறவைக்க இப்பொழுது காயத்தை ஏற்படுத்துகிறேன் என்ற வாதத்தை ஒத்துகொள்வீர்களா?

முஸ்லிம்,கிறிஸ்துவர்களை நோக்கியும் கேள்வி கேட்கிறார்,

முகமதியர்களே-கிறிஸ்துவர்களே,

உங்களுக்கு முற்பிறப்பு-பூர்வ ஜென்மம் பற்றி நம்பிக்கை இல்லை. சர்வ வல்லமை படைத்த உங்கள் கடவுள் இந்த உலகத்தை படைக்க ஏழுநாட்கள் எடுத்துகொண்டது ஏன்? தினமும் நன்றாய் இருக்கிறது என்று ஏன் கூறினான்?

இன்று அவனை கூப்பிடுங்கள். "எல்லாம் நன்றாய் இருக்கிறது என்று சொல்லும் தைரியம் இருகிறதா பாப்போம்"?

தண்டனை மூன்று வகை "பழிக்குப்பழி,பயங்காட்டுதல்,சீர்திருத்துதல்"
இந்த மூன்றில் முற்போக்கு சிந்தனையாளர்கள் சீர்திருத்துதலையே முன்வைகின்றனர்.

அப்படியிருக்க முன்ஜென்ம வினைக்காக மக்களை துன்பபடுதுதல் சரியா?

தண்டனையாக மாடாக,பூனையாக,நாயாக 84 லட்சம் இருபதாக சொல்கிறீர்கள். இதனால் அடையும் சீர்திருத்தம் எனன? முன்ஜென்ம ஞாபகம் கொண்டவர்கள் யாரேனும் உண்டா?

தனது பொழுதுபோக்கிற்காக மக்களை கொன்று குவிக்கும் செங்கிஸ்கான் போல்தான் கடவுள் என்றால் வீழ்த்துங்கள் அவனை!" என்று கர்ஜிக்கிரான் இந்த சிங்கம்.

சரி உலகத்தை படைத்தவன் கடவுள் இல்லை? மனிதனை படைத்தவன் கடவுள் இல்லை?பிறகு யார்தான் இதற்கெல்லாம் மூலம் என்கிற கேள்வி எழும். இதற்க்கு பதில் பகத்சிங் நடையில்,

"இந்த விசயத்தில் தெளிவு கொள்வதற்கு சார்லஸ் டார்வின் எழுதிய "orgin of species " நூலை படியுங்கள். பல்வேறுபட்ட பொருட்கள் தற்செயலாக கலந்து உருவானதில் பிறந்தது இவ்வுலகம். பூர்வ ஜென்ம பலன் ஏதும் இல்லை - அதற்கு நம் ஜீன் தான் காரணம் என்று வல்லுனர்கள் சொல்லிவிட்டனர்.

கடவுள் ஒன்று இல்லை என்றால், மக்கள் எப்படி கடவுள் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர்?

பதில்- சில பித்தலாட்டக்காரர்கள் மக்களை அடிமையாகி வைத்துகொள்ள கடவுளை உருவாகி பிரசாரம் செய்தனர். மக்கள் எப்படி பேய்,பிசாசு என்பதை நம்பினார்களோ அதே போல்தான் கடவுளையும் நம்பினார்கள். மனிதனுக்கும் தன்னுடைய கஷ்ட காலங்களில் தன உறவுகளையும் தாண்டி ஒன்றை நாட மனம் எத்தனித்தது. இது மிருக நிலையில் சரி. மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு மாறி பகுத்தறிவுடன் அதை உடைத்தெரியாமல் போனது துயரம்."

முடிவுரையாக, "கஷ்ட காலத்திலும் தைரியமாக எதிர்த்து நின்ற நாத்திகர்கள் பலரை பற்றி படித்திருக்கிறேன். நானும் என்னுடைய முடிவுரையில், தூக்கு மேடையில்கூட ஆண்மையுள்ள மனிதனை போல தலைநிமிர்ந்து நிற்கவே முயற்சி செய்து வருகிறேன்". - என்று முடித்திருந்தான் அந்த பகுத்தறிவாளன்-நாத்திகன்-மாவீரன் பகத்சிங்.


நான் மனிதன் அல்ல..!


வாலில்லை! மனிதன்தான்! பிறந்தேன்!
தொட்டில் ஆடும் பாட்டெல்லாம் கடந்தேன்!
குட்டி நடைபோட கட்டைவண்டி பிடித்தேன்!
சிரித்து விளையாட நேசமுகம் பிரித்தேன் !

வீசி விளையாட வீரமாய் சிரித்தேன் !
தூசி நிலத்தில் தூரிகையாய் நடந்தேன்!
காசு கைகாட்ட கல்விகூட பயின்றேன் !
எதோ விதி மாட்ட வேலையிலும் சேர்ந்தேன்!

நாளை நிஜமென்று நடந்தேன்!
நாளும் கனவொன்று கண்டேன்!
ஓடும் நதிபோல அலைந்தேன் !
ஓட்டம் முடியாது உணர்ந்தேன்!

நேரம் கடிகாரம் மறந்தேன் !
 பணமே குறியென்று கிடந்தேன் !
நேசம்- மோசம் நேரமென கடந்தேன்!
வாழ்க்கை புதிர் கண்டு சிரித்தேன்!

கண்முன் ஓடும் காட்சியெல்லாம் அழைத்தேன் !
என் வரியில் ஓடி விளையாட பணித்தேன் !
காக்கையும் குயிலென்று விளித்தேன்!
சிறு காகிதத்தில் சிறகுகளை விரித்தேன்!
உலகை சுற்றி ஒரு நொடியில் பறப்பேன் !

சிறு வரியில் சிலுவையையும் சுமப்பேன்!
வார்த்தைகளால் வாழ்க்கையே அளப்பேன் !
பார்ப்பவர்கள் யாரேனும் கேளிசெய்தல்
நான் மனிதனல்ல ... கவிஞன் என சிரிப்பேன்!!




ஆயிரம் ஜன்னல் - ஒரு பார்வை


சாமியார்கள்,போதனைகள் எல்லாம் போலிகள் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கும் இந்த தருணத்தில் யோகா குருவாக வலம்வரும் சத்குரு அவகளின் பொன்மொழிகள் எழுத்தாளர் சுபா வின் கைவண்ணத்தில் ' ஆயிரம் ஜன்னல்' என்ற புத்தகமாக வெளிவந்ததை அனைவரும் அறிந்தது. அந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த பல விசயங்களை அல்லது பொன்மொழிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள அவா.


(முதல் மழை)
"மழை வந்தவுடன் வீட்டுக்குள் ஓடி விடுதலோ,குடை பிடித்தலோ தவறு. மழையை வரவேற்க கற்றுக்கொள்ள வேண்டும். வீட்டிற்க்கு வருகை தரும் ஒரு நண்பரை போல கொஞ்ச நேரம் அதனோடு நலம் விசாரிக்க வேண்டும். மழையோடு ஒன்றாய் கலக்கும் போது ஒரு நேசம் உண்டாவதை உணர்வீர்கள்.(அடுத்த தடவை மழை வந்த முயற்சி பண்ணுங்க)

(மன்னிப்பு)
"நான் மன்னித்துவிட்டேன் என்று பெருமை படுவதை விட , அதை நான் குற்றமாக கருதவில்லை என்பது தான் பெருமையான விசயம்."

(ஒரு முறை யோசி)
"நீ எதை செய்ய நினைக்கிறாயோ அதை இந்த உலகமே எதிர்த்தாலும் துணிந்து செய். ஆனால் ஒன்று, இந்த உலகமே நீ செய்ததை கேவலமாக பார்க்கலாம். ஆனால் நீ செய்ததை நினைத்து பிற்காலத்தில் நீயும் அவமானமாக உணரக்கூடும் என்றால் அதை செய்யதே."

(மலரின் மகத்துவம்)
"வாழும்வரை மலர்போல் இருக்க வேண்டும், பிறர் கவனித்தாலும் கவனிக்காமல் போனாலும் உதிரும் வரை இயல்பு மாறது. சிலர் உன்னை பாராட்டாமல் போனாலும் உன் இயல்பில் இருந்து மாறாதே."

(ஆழமாய் கவனி)
"எல்லாவற்றையும் கூர்ந்து கவனியுங்கள் , அதிக கவனம் செலுத்துவது புதிய ஆற்றலை கொடுக்கும்."

(கடலின் ரகசியம்)
"கடலை ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள் , அலை வந்து திரும்பும் போது உங்கள் மன அழுத்தங்களையும் அழைத்து செல்லும்."

(அதே கடவுள் புதிர்)
"கடவுளானாலும் , ஆவியான்லும் யாரோ சொல்வதை நம்புவது முட்டாள்தனம். அனுபவத்தில் இல்லாத காரணத்தால் அதை இல்லை என்று மறுப்பதும் முட்டாள்தனம்."

(பயணம்)
"அடிக்கடி பயணம் மேற்கொள்வதால் அனுபவமும் சிந்தனையும் அதிகரிக்கும்".

{சந்தர்ப்பவாதிகளுக்கு)
"அன்பினால் சேர்ந்து இயங்குவது மகத்தானது. தேவையினால் சேர்ந்து இயங்குவது அருவருப்பானது."

(நட்பு)
"நட்பு பகிர்தல் என்பது கொடுக்கல் வாங்கல் இல்லை , அது ஒருவர் மற்றொருவரில் கரைந்து போதல்."

(மனம் சார்ந்தது)
"இளமை மூப்பு எல்லாம் உடலுக்குத்தான். மனதுக்கு அல்ல. மனம் சுறுசுறுப்புடன் இருந்தால் நீங்கள் என்றும் பதினாறுதான்."

(கனவு)
"ஆசையும், அதை முடிக்கும் ஆற்றலும் இருந்தால் எதுவும் சாத்தியம்".

(நீங்கள் நீங்களாக)

"யாரையும் துதிக்கவும் வேண்டாம். மிதிக்கவும் வேண்டாம்."

(தலைமுறை சொத்து)
"உங்களின் அடுத்த தலைமுறைக்கு பிழைக்கும் வழியை தவிர வாழ்க்கை வாழும் முறையையும் விட்டு செல்ல வேண்டும்."

(உதவிக்கரம் போதும்)
"மற்றவர்களை புரிந்து கொள்ள முயல்வதை நிறுத்துங்கள். அவரது வளர்சிக்காக உதவுங்கள் அது போதும்."

(வாழ்க்கையின் சுவை)
"அன்பு,சந்தோசம்,பரவசம் காரணமாக உங்கள் கன்னங்கள் நனையாமல் இருந்தால் நீங்கள் இன்னும் வாழ்க்கையின் சுவையை அறியவில்லை என்று அர்த்தம்."

(கொண்டாட்டங்கள் முக்கியம்)
"வாழ்க்கையில் எதயோ எட்டிபிடிக்க வேகத்தை கூட்டிக்கொண்டே செல்வதால் வாழ்க்கையை தொலைத்துவிடும் அபாயம் உள்ளது. அவ்வப்போது பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபடுங்கள்"

(குற்றவாளிக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?)
"இருவரும் சந்தோசத்தை தேடித்தான் செல்கிறீர்கள். ஆனால் விதிமுறைகள் மீறினால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரிந்திருக்கிறது. பிடிக்காவிட்டாலும் வரிசையில் நிற்க நீங்கள் தயார். அவர்கள் தயாராக இல்லை."

(வாழக்கை மன்னிக்கும் விதம்)
"வாழ்க்கை எல்லா நேரத்திலும் நம்மை பொறுத்துக்கொள்ளது. அது மன்னிக்க மறுத்துவிடும் நேரங்களும் உண்டு என்பதை மறக்காதீர்கள்."

(ஒழுக்கம் பற்றியது)
"ஒழுக்கம் என்பது நிபந்தனைகளால் திணிக்கப்படக்கூடாது. அது அன்பினாலும் பொறுமையாலும் உருவாக்கப்பட வேண்டும்."

(தற்கொலை பற்றியது)
"தற்கொலை முயற்சிக்கு பெரிய அளவில் துணிச்சல் தேவை இல்லை. அபரிமிதமான முட்டாள்தனம் போதுமானது."

(Time Management பற்றி பேசுவோர்களுக்கு)
"நீங்கள் நிர்வாகிக்க வேண்டியது நேரத்தை அல்ல. உங்களை."

(ஜோசியத்தை நம்பலாமா??)
"ஆருடம்,ஜோசியம் என்பது வானிலை அறிக்கை போன்றது. மழை பெய்யும் என்று சொல்லட்டும் ,நான் நனைவேன் என்று எப்படி சொல்ல முடியும்? - நனைவதா வேண்டாமா என்பதை முடிவு செய்வது என் கையில் அல்லவா இருக்கிறது."


அந்த புத்தகத்தில் மூன்று அழகான தத்துவங்களையும் மேற்கோள் காட்டி இருந்தார்.
ஒன்று:
"எல்லாவற்றையும் முதல் தடவை பார்ப்பது போல் கவனி" - கவிஞர் எலியட்
இரண்டு:
"ஒவ்வொரு கணத்திலும் டிக்.. டிக்.. என்று கரைந்து கொண்டிருப்பது நேரமல்ல. உங்கள் வாழ்க்கை."
மூன்று:
"எல்லா விடைகளையும் அறிந்து விட்டதாக நான் நினைத்த நேரம் கேள்விகளே மாறிபோய் இருந்தன."