பிடிக்கும்


பிடித்ததற்க்கான
காரணம் கேட்கிறீர்கள்!
ஒரு மழைநாளில்
ஒதுங்கிய மாடிப்படியின்
அருகில் என்னைப் பார்த்ததும்
உதாசீனப்படுத்தி
பறக்கமால் இருந்த
காரணத்தால் அதை
அதிகம் பிடிக்கும்.

கவிநிலா


அண்ணன் மகளின்
புகைப்படத்தை அனுப்பியிருந்தார்
அவளின் முகத்தை முதலாய்
பார்க்கும் படம் - எனக்காக
போனால் போகட்டுமென்று
பூ நகையையும் வீசியெறிந்திருந்தாள்.
அப்புன்னகை
அங்கேயேதான் இருக்கிறது
தேவதைகளின் புன்னகையை
சேகரிப்பவனின் நினைவுகளின்
அறையில்.
அனுமதி தேவையில்லை
தேவதைகளை கண்டால்
உடனே அனுப்பி வையுங்கள்
அவர்களிடம் புதிதாய் காட்ட
என்னிடம் ஒன்று இருக்கிறது.
யுகங்கள் காண காத்திருந்த
பூவின் புன்னகையும்
அதை வரமாய் வாங்கி வந்திருக்கும்
புகைப்படமும்!

இருளும் சமாதானமும்


தீர்த்துவிடும் முனைப்பில்
கொட்டும் கனமழையின்
நள்ளிரவில் 
சரியாக கட்டைவாருடன்
இடையன் அமர்ந்திருந்த
இடத்தை கடக்கும்போது
மழையின்
 குரூரம்
நகரவிடமால்
 மிரட்டுகிறது.
தூரத்தில்
 கரியமேடாய்
காட்சியளிக்கும்
 எரிமலையின்
காத்திருப்பைபோல
இப்போது
 நானும்.
மாலையில்
என்னை
 அலட்சியப்படுத்தாமல்
மேய்ந்து
 கொண்டிருந்த
ஆடுகள்
 நின்ற பக்கம்
இருளில்
 வலுவாய் அசைகிறது.
அது
 வழிதவறிய ஆடுகளில்
ஒன்றாய்
 இருக்குமென்று
நான்
 சமாதானமடைகிறேன்.
இடையனின்
 கணக்குப் பற்றி
ஒன்றும்
 அபிப்பிராயமில்லை.
இப்போது
 இன்னும் அருகில்.
எனக்குள்
 நடந்த
சமாதான
 பேச்சுவார்த்தை
தோல்வியடைகிறது.


இரு குருவிகள் வாழும் வீடு


பன்னெடுங்காலமாக அந்த வீடும்
இரு குருவிகளும் இருக்கின்றன
இப்பொழுது நானும்.
வளைந்து செல்லும் மாடிப்படியின்
இரண்டாவது வளைவில்
இப்பிரபஞ்சத்தையே அலைந்து
கட்டிய குருவிகளின் வீடு.
மூன்றாவது அடுக்கின்
கடைசிப்படியில் மூச்சுவாங்கி
முகம்பார்க்கும் வாக்கில்
சூன்யமான அறைகளை கொண்ட
நான் வாழும் வீடு.
நாங்கள் இரவுகளில் சந்தித்து
காலையில் பிரிந்து செல்கிறோம்.
அறைகளை பூட்டியபின்
நான் கையிலெடுத்துச் செல்லும்
சாவிகளைப் பார்த்து பதட்டமடைகின்றன.
சிரித்திருக்கவும் வாய்ப்புண்டு.
இன்று இரவு அவை இரண்டும்
இன்னும் வீடு திரும்பவில்லை
எனக்கு பதட்டமாய் இருக்கிறது.
இப்போது குருவிகள் இல்லாத அவ்வீடு
நான் வாழும் வீட்டைப்போலவே
சூன்யமாயிருக்கிறது.

ஓலம்


பேரிரைச்சலுடன் பெய்த 
அப்பெருமழை அதிர்ச்சியாயிருந்தது.
அந்த ஒலம் என்னை
அலக்கழித்துக் கொண்டேயிருந்தது.
நீண்ட நேரம் கழித்து
நான் தூங்கிப் போனேன். 
விழுந்த மழைத்துளி அதன்
பயணத்தை துவங்கியிருந்தது