பெண்ணே !
பாதம் நோகாமல்
பார்த்து நட
நாதம் தவறாமல்
பாட்டு வர !
சேலை கொண்டு
தாமரை நடக்க
மாலை சூரியன்
மயங்கி கடக்க !
ஏங்கி
கிடக்கும் கனவுகள் எல்லாம்
கரும்பில்
இருக்கும் சர்க்கரை வெல்லம்!
பார்த்து
சிரித்து நீ பரவசம் அடைய
சேர நினைத்து
நான் உன் வசம் அடைய!
காத்து கிடந்த
நினைவுகள் எல்லாம்
பூத்து
நிற்கும் நாளை எண்ணி
வளைத்து
நிற்குது உயிரை பிண்னி!
இரவு நிலவை
மேகம் சூட
என் நினவு
எல்லாம் மதிமுகம் மூட!
யாரும் அறிய
முடியா உன் உள் அகம்
கடவுளும்
அமைப்பான் புது வியுகம்!
மதிமுக
நிலவுக்கு தேவை இல்லை ஆடை
என் முகம் மலர
நீ காட்டு அரை ஜாடை !
ஓர்நாள்
நிலவில் உயிர் உறங்க போவதுண்டு
என் நிலவு
என்றோ ஓர்நாள் மனமிறங்க போவதுண்டு !
நிலவே என்றும்
இரவொட உறவு!
பிரிவே
காதலுக்கு
இணை பிரியா
உறவு !
இரவு
முழுவதும் கண் கலங்க
கண் விழித்து
எழுதி வருகிறேன் !
உன் கண்
பார்த்த கண நேரத்தை
கண்
இமைக்காமல் நினைத்து!
0 Comments:
Post a Comment