வண்ண வண்ண பூக்கள்!

பெண்ணே...!
உவமைகள் பல கொண்டு
என் உலகை ஆட்கொண்டு
உன் உடமை உயிர் வரைக்கும்
அளந்து சொல்லும் கவிதை
---சித்தரிப்பு


அன்ன நடை கொண்டு
பன்முக நகை கண்டு
உன் அடி பாதம் மெல்ல
மண் மீது எடுத்து வைத்தல்
--- அணிவகுப்பு

மென்குழல் கை கொண்டு
இதழ் விரி மலர் கண்டு
விரல் மலர் வாள் கொண்டு
செல்லமாய் கிள்ளி எடுப்பது
---பாவ மன்னிப்பு

மெல்லிய இதழ் விரித்து
சொல்லும் வார்த்தையெல்லாம்
வான் உயர் தேவதையின்
உள் அக உச்சரிப்பு
---மொழி பெயர்ப்பு

சிற்பி இமை திறந்து
முத்து விழி கொண்டு
உன் உயிர் சேர்த்து
என் உலகை பார்பதனால்
நீ என்னை காதலிக்கிறாய் !
--- கருத்துக்கணிப்பு

சில நேரம் பார்க்கிறாய்
பார்த்ததும் சிரிக்கிறாய்
என்னதான் சொல்வாய் ...
உன்னையே தொடரும்
---கண்காணிப்பு

உன்னை காண நான்
மறக்காமல் அவதரிப்பேன்
தலை சாய்த்து பார்த்து விட்டு
உன் புது மலர் இதழ்களில்
--- புன்னகைபூ



0 Comments:

Post a Comment