கோயம்பேடு

அவ்வளவு
கூட்டத்திலும்
கண்டுபிடித்துவிடலாம்!
அங்கே ஊழியம்
செய்பவர்களின்
உறவுக்காரர்களை!

மூச்சுதினரும்
கூட்டத்துக்கு நடுவே
முன்பதிவு சீட்டு
இல்லாமல் சிறு
புன்னகையோடு
ஏறி கை அசைக்கும்
கணவான்களின் உருவில்!


பொதுப்பெயர்


மருதமுத்து
மச்சான்,மாப்ள
தம்பி,அண்ணா
என ஆயிரம்
பெயர்களில்
அழைக்கப்பட்டவன்
நேற்று காலை
லாரியில்
அடிபட்டு
இறந்துவிட்டான்!
அருகில் நின்ற
ஆட்டோகாரர் முதல்
அனைவரும் சொல்கிறார்கள்

" பொணத்தை தூக்குங்கப்பா”!!!