என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .....!


அழகிய பொழுது விடிந்து
            காலை கதிரவன் எழுந்து 
சேவலின் ஒலி பிளந்து 
          கரிய இருள் அகன்று 
கண் விழித்து பார்கையில்
          தை திருநாள் கையில் தவழ்கிறது !

ஊரெங்கும் உறவு அலை 
          பொங்கல் கொண்டாட்ட நிலை !
வாசலெங்கும் சாண நீர் தெளித்து 
    அரிசிமாக் கோலமிட்டு 
பார்ப்பவர் கண் அசர 
     வண்ணத்தை கலந்து உரச
நேரம் ஒன்பதை தொட்டு பார்த்தது !

சொந்தம் அனைத்தும் 
          சொக்கும் ஆடையணிந்து 
பக்கத்தில் உள்ள 
      கோவிலுக்கு சென்று 
தங்கள் குலம் விளங்க - வாழ்வு 
   முழுவதும் வளம் பொங்க 
அனைவரும் வணங்கி நிற்க !

முக்கல் உரச அடுப்பு வைத்து
        சுட்ட மண் பானை  இட்டு
சர்க்கரை ஏலம் சேர்த்து 
        அரிசியிட்டு பொங்கலிட்டு
இலையிட்டு படையலிட்டு 
       அனைத்தையும் கலந்து வைத்து
பொங்கலை அனைவருக்கும் ஊட்ட - வேறு
         தேவையில்லை அன்பை காட்ட !

சொந்தங்கள் சேர்ந்து வந்தால்
          சந்தங்கள் வந்து பாடும்
தை திங்கள் வந்துவிட்டால்
        சொந்தங்கள் வந்து கூடும் !



0 Comments:

Post a Comment