கவிநிலா


அண்ணன் மகளின்
புகைப்படத்தை அனுப்பியிருந்தார்
அவளின் முகத்தை முதலாய்
பார்க்கும் படம் - எனக்காக
போனால் போகட்டுமென்று
பூ நகையையும் வீசியெறிந்திருந்தாள்.
அப்புன்னகை
அங்கேயேதான் இருக்கிறது
தேவதைகளின் புன்னகையை
சேகரிப்பவனின் நினைவுகளின்
அறையில்.
அனுமதி தேவையில்லை
தேவதைகளை கண்டால்
உடனே அனுப்பி வையுங்கள்
அவர்களிடம் புதிதாய் காட்ட
என்னிடம் ஒன்று இருக்கிறது.
யுகங்கள் காண காத்திருந்த
பூவின் புன்னகையும்
அதை வரமாய் வாங்கி வந்திருக்கும்
புகைப்படமும்!


0 Comments:

Post a Comment