இருளும் சமாதானமும்


தீர்த்துவிடும் முனைப்பில்
கொட்டும் கனமழையின்
நள்ளிரவில் 
சரியாக கட்டைவாருடன்
இடையன் அமர்ந்திருந்த
இடத்தை கடக்கும்போது
மழையின்
 குரூரம்
நகரவிடமால்
 மிரட்டுகிறது.
தூரத்தில்
 கரியமேடாய்
காட்சியளிக்கும்
 எரிமலையின்
காத்திருப்பைபோல
இப்போது
 நானும்.
மாலையில்
என்னை
 அலட்சியப்படுத்தாமல்
மேய்ந்து
 கொண்டிருந்த
ஆடுகள்
 நின்ற பக்கம்
இருளில்
 வலுவாய் அசைகிறது.
அது
 வழிதவறிய ஆடுகளில்
ஒன்றாய்
 இருக்குமென்று
நான்
 சமாதானமடைகிறேன்.
இடையனின்
 கணக்குப் பற்றி
ஒன்றும்
 அபிப்பிராயமில்லை.
இப்போது
 இன்னும் அருகில்.
எனக்குள்
 நடந்த
சமாதான
 பேச்சுவார்த்தை
தோல்வியடைகிறது.




0 Comments:

Post a Comment