ஒத்தை சொல்லலே ..!

  அலையாடும் கடல் மீது
         ஓடி விளையாடும் ஓர் ஆசை !
பாடும் குயிலோடு பறந்து 
        கவி பாடும் ஓர் ஆசை !
அடிக்கும் காற்றோடு மிதந்து 
        சுற்றி வரும் ஓர் ஆசை !
பற்றி எரியும் தீயில் வீழ்ந்து 
      குளிர் காயும் ஓர் ஆசை !
மழலை மொழிக்குரலோடு  நித்தம்
      இசை கேட்கும் ஓர் ஆசை !

அத்தனையும் சாத்தியமடி 
      நீ சொல்லும் ஒத்தை சொல்லில் !


0 Comments:

Post a Comment