கொல்லுதே மழைக்காலம்


வெயில கூட தாங்கிடலாம் .. ஆனா இந்த மழைக்காலத்துல அப்பப்பா.. ன்னு கிராமத்துல சலிச்சுக்கிற நிறைய பேர பாத்துருக்கேன், இதையெல்லாம் அவங்க சொல்றது அடைமழைக்காலத்துல. ஆனா சென்னையில சும்மா கால் மணிநேரம் தூறல் தூறினாலும் .. முடியலடா சாமி .. சென்னைக்கும் தண்ணிக்கும் ஆகாது போல.குடிக்கிற தண்ணிய இருந்தாலும் சரி , கொட்டுற மழையா இருந்தாலும் சரி . ரெண்டுமே கஷ்டம்.

 சென்னையில சாதாரண நாட்களிலே வாகன நெரிசல் பத்தி கேக்கவே வேண்டாம் . மழைக்காலத்தில் எறும்பு கூட்டம் போல் அல்லவே நகர்கிறது. எல்லாரும் சொல்லற மாதிரி குண்டும் குழியுமான சாலைஎன்பாதால் மழைநீர் நிரம்பும் காலங்களில் எது குண்டு எது குழி என்று தெரியாததால் வண்டியை வேகமாக நகர்த்த நமது ஓட்டுனர்கள் பயப்படுவது ஒரு காரணம். அடுத்த ஸ்டாப்பில் இறங்க அரைமணி நேரம் ஆகுதுன்ன பாத்துக்குங்க.

அப்புறம் நம்ம பாதசாரிகள் , பேருந்துல கஷ்டப்பட்டு கீழ இறங்கி நடக்கணும்ன்ன கையில் ஒரு ஊன்றுகோல் இல்ல எதாச்சும் படகு வேணும் கடக்க. சுற்றிலும் தண்ணீர் - தீவில் விடப்பட்டது போல காட்சி. எங்க கால் வச்ச எவன் வெட்டுன குழி இருக்குமோன்னு பயம். இதெயெல்லாம் மீறி நடந்து போன எதோ நேத்திகடன் மாதிரி சேறை வாரி உடம்பில் அடித்துவிட்டு செல்வார்கள் நம்ம ஓட்டுனர்கள்.

 இன்னும் எவ்வளவோ கஷ்டம் , மழை நீர் வடிய வடிகால் இல்லாதது எவ்ளோ கஷ்டம்,இருக்குற வடிகாலையும் சிலர் குப்பைதொட்டி ஆக்கினதால எவ்ளோ கஷ்டம்,குளிப்பான கடையில கைய குத்த வச்சு உக்கந்துருப்பவர் - 500 இளநீர்களை சாலையோரம் போட்டுவிட்டு விரக்தியான முகத்துடன் குடையை பிடித்து கொண்டிருக்கும் பெண், சாலை ஓரமே வீடாய் நினைத்து அங்கேயே சமைத்து அங்கே உறங்கும் மக்கள் என இங்கு வாழும் அனைவருக்கும் எவ்வளவு கஷ்டம் மழைக்காலம் என்றால்.

 மழை தவிர்க்க முடியாத , தவிர்க்க பட கூடாத ஒன்றுதான். ஆனா இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டியது. மழைக்காலத்துல வேளச்சேரி,தரமணி பக்கம் போயிட்டு வாங்க.என்ன கொடுமை சார் ன்னு உங்க தலையில நீங்களே அடிச்சுகுவீங்க...அங்க இருக்குற குழந்தைகள் rain rain go away -ன்னு பாடின சரின்னுதான் தோணுது.


0 Comments:

Post a Comment