குழந்தைப் பாசம்


 பார்த்த நொடியில் அனைவரையும் ஈர்க்கும் வல்லமை கொண்டவர்கள் குழந்தைகள். அதற்கு அவர்களின் குழந்தைத்தனம்குணம்விளையாட்டாய் செய்யும் செயல்கள்பேசும் மழலைக் குரல்சுத்தமான அன்புஎதையும் எதிர்பார்க்காத பாசம். குழந்தைகளை விட அவர்களிடம் குழந்தைதனமாய் விளையாடும் பெற்றோர்களின் செயல் பார்க்க மிக அழகாய் இருக்கும்.அந்த குழந்தை வளர்ந்து ஆளான பின்பும் அவர்களிடம் குழந்தை தனமாய் பேசும்- விளையாடும் பெற்றோர்களை பார்க்கும் பொது என் மனம் லயித்து கிடக்கும்.

 
சென்னை டு பாண்டி செல்லும் பேருந்தில் நான் அமர்ந்திருந்த எதிர் பக்கம் ஒரு குடும்பத்தினர் பயணம் செய்தனர். முன் இருக்கையில் அப்பாவும் அம்மாவும்பின் இருக்கையில் அவர்களின் இருபது வயதை ஒத்த பெண் குழந்தைகள். அந்த அப்பா கையை பின்புறம் கட்டியவாறு இருக்கையின் மேல் வைத்திருந்தார். பின்னல் இருந்த அந்த பெண் குழந்தை அவரின் உள்ளங்கையில் கைவைபதும்அவர் கையை மூடி அந்த பெண்ணின் கையை பிடிக்க முயற்சியுமாய் அந்த சிறுபிள்ளை விளையாட்டு பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தது.

 
ஒரு தாயின் பாசம் அதையும் தாண்டி என்னை பிரமிக்க வைத்தது. நண்பனுக்காக டீ கடையில் காத்திருக்கிறேன்பக்கத்தில் ஒரு 40 வயதை தாண்டிய பெரியவர். அந்த வழியே கடந்து சென்ற 75 வயது மதிக்க தக்க ஒரு பாட்டி திரும்பி பார்த்ததும் மிகுந்த சந்தோசத்துடன் எங்களை நோக்கி நடந்து வந்தார். என் பக்கத்தில் இருந்த அவர் வாம்மா எப்டி இருக்க என்று கேட்டு முடிக்க,அந்த அம்மா அவரின் தலையை கோதிக்கொண்டே " சாப்டியாப்பா ? ஏன் சவரம் பண்ணலபாருமுகம் சோகமா தெரியுதுஇந்தா நூறு ரூபா மூத்தவன் கொடுத்தான் வச்சுக்கோ கொழந்த - இளையவள் வீட்டுக்கு போயிட்டு வர்றேன்" - சொல்லிக்கொண்டே முகத்தை தடவி பார்த்துவிட்டு பாட்டி சென்றார். கொஞ்ச நேரம் கழித்து பக்கத்தில் இருந்தவரின் கண்ணில் துளியை பார்த்ததும் சற்று பிரமித்து போனேன். என்னே குழந்தை பாசம்!!!


1 Comments:


இருவது வயது பெண் குழந்தையா?


Post a Comment