என்னவளே !

கனவுகளும் வலிக்குதடி - உன்னை 
கண்மணிக்குள் நிறுத்திவிட !
உணர்வுகளும் துடிக்குதடி -இனி 
உன்னோடு கலந்து விட !

எண்ணங்களை சுமந்து வந்த 
என் நெஞ்சில் -  என்றும் 
வண்ண கனவுகளை சுமக்க வைத்து
என் வாழ்வோடு வாழ்பவளே !

கண்ணோடு கண்டவைகள் என்றும்
காட்சியோடு மறைந்துவிடும் !
கனவில் உன்னோடு கண்டவைகள் 
இறுதிவரை மூச்சாக கூட வரும் !

பண்னோடு இசை பாட 
   பாவலரும் இனி இல்லை!
உன் மடியோடு நான் தூங்க
     வேறு வரம் ஏதும் தேவை இல்லை ! 




0 Comments:

Post a Comment