கனவுகளும்
வலிக்குதடி - உன்னை
கண்மணிக்குள்
நிறுத்திவிட !
உணர்வுகளும்
துடிக்குதடி -இனி
உன்னோடு
கலந்து விட !
எண்ணங்களை
சுமந்து வந்த
என் நெஞ்சில்
- என்றும்
வண்ண கனவுகளை
சுமக்க வைத்து
என் வாழ்வோடு
வாழ்பவளே !
கண்ணோடு
கண்டவைகள் என்றும்
காட்சியோடு
மறைந்துவிடும் !
கனவில்
உன்னோடு கண்டவைகள்
இறுதிவரை
மூச்சாக கூட வரும் !
பண்னோடு இசை
பாட
பாவலரும் இனி இல்லை!
உன் மடியோடு
நான் தூங்க
வேறு வரம் ஏதும் தேவை இல்லை !
0 Comments:
Post a Comment