சூரிய காந்தி

என் மனமென்னும் சோலையில் 
              மகிழ்ச்சியுடன் தொடங்கி
 மலராத மொட்டாய்
            மானசீகமாய் தொடர்ந்து வரும்
என் மாண்புமிகு காதலை 
           உன்னிடம் உவமையாய் கூற விரும்பினால் !

  மனம் என்னும் மண் எடுத்து 
          விழி என்னும் விதை எடுத்து 
 காதல் இன்னும் சோலையில் 
         பூத்த சூரிய காந்தி பூ நான் !

 நீ  எத்திசையெல்லாம்  செல்கிறாயோ 
            அத்திசையெல்லாம் நித்தம் பூக்கின்ற
புத்தம் புதிய  சூரிய காந்தி பூ நான் !



0 Comments:

Post a Comment