உனக்காக காத்திருந்து..!


விடிகாலையில்
             உன்னை காண வந்தேன் !
காத்திருந்தே ...
சலிப்படைந்து - என் 
நிழல் கூட இளைப்பாற 
         சென்று விட்டது !

நான் சாய்ந்து நின்றிருந்த 
மரம் கூட முணுமுணுத்துக் 
கொண்டே இலைகளை 
என்மேல் வாரி இறைக்கிறது!

நான் இருந்தும் பயமில்லை !
காதலனை அழைக்கிறது கூவும் குயில்!

பார்த்துக்கொண்டே 
        இருக்கும் வரை ஒன்றுமில்லை !
படுத்து உறங்க 
         முயற்சித்தால் முடியவில்லை !
                      - அவளது கண்களால் ..

நகம் கடித்துக்கொண்டே 
உடலில் நயம் இல்லாமல் 
சிரித்துக்  கொண்டே இருக்கிறேன் !

நான் பார்த்து கொண்டிருந்த
         சாலை கூட பாம்பு போல 
நெகிழ தொடங்கி விட்டது...

சாலையை கடக்கும் 
         சப்பாணி சிலபேர் -என்னை 
வலி காட்டும் கல்லாகவே 
          மாற்றி விட்டனர் !

என் இமை கூட இமைப்பதற்கு 
         ஆறு நொடி நேரம் 
அதிகம் எடுத்து கொள்கிறது !
ரத்த அணுக்களுக்கு கூட 
          சக்தி இல்லையாம் ! 
            - என் காத்திருப்பால் !

கையில் கடிப்பதற்கு 
    நகம் பாக்கியில்லை!
சில்லறை வாங்கா 
        சிலையென நிற்கிறேன்!

கதிரவன் கூட 
   காலை வாரிவிட்டான் !
அவன்கென்ன அவசரமோ 
      அவன் விடு சென்று விட்டான் !

இருள் கூட வந்து விட்டது !
    அவள் அருள் கிடைக்கவில்லை !
ஒரு வேலை அவள் மறந்து இருக்கலாம் !
நாளை பார்க்கலாம் ....
               காத்திருத்தல் கூட ஒரு சுகம் அல்லவே!


1 Comments:


யார் அவள்?


Post a Comment