தன் காதலியின்
வரவுக்காக காத்திருந்த நிமிடங்கள் தான்
சிலர்
வாழ்வில் அடிக்கடி நினைவில் வந்து செல்லும்...
அப்படி வாழ்வில் வந்து
செல்லும் சில நிமிடங்கள்....
ஒன்றும்
புரியாத நிமிடத்தை
எதிர் நோக்கி
காத்திருக்கும்
என்னை
பார்த்து -நிமிராமல்
நீ நீக்கும்
புன்னகையால் - என்னை
அறியாமல் நான்
சிரித்த என்
வாழ்வின்
ஆரம்ப நிமிடங்கள் !
சாலையோர
மரங்கள் கூட - என்னை
சங்கடமாய்
பார்த்து நிற்க ! - என்
கண் உன்னையே
பார்த்து நின்று
கருவளையம் கூட
வலுவிழக்கும் !
தினமும்
தவறாமல் கடந்து சென்று
என் அரை ஜாடை
பாடலினால் சிந்தும்
முத்து மலை
புன்னகையால் -அந்த
உயிர்
பறக்கும் சந்தோஷ நிமிடங்கள் !
உன் புன்னகையே
போதுமடி - நான்
சிந்தும்
கண்ணீரும் சிலையாகும் !
வண்ண
கனவுகளால் வரைந்து வைத்த
உன் சொல்லாத
ஆசையெல்லாம் - என்
முன்னால் ஓர
சொல்லல் சொல்லி
சென்ற
வார்த்தைகளால் உறைந்து
நின்ற உன்னத
உயிர் நிமிடங்கள் !
பார்வையிலே
படர்ந்து வரும்
நம் காதல்
கொடியை - என்
கவிதையால்
கால் கொடுக்க
சிந்தையை முன்
நிறுத்தி -மனக்
கண்ணுக்குள்
சிலை வடித்து
உன்
சிரிப்பால் சிலேடை தரும்
என் சிந்தனை
நிமிடங்கள் !
உனக்கே என்று நினைத்து
வைத்த
வாழ்த்து
அட்டை முதல் - என்
மனக்கோட்டை
வரை -யாரும்
அறியாமல் உன்
நினைவிற்காக
நான் பதுக்கும் நிமிடங்கள்
!
உன் கண்
பார்க்கும் ஒரு நிமிடம்
நீ என்னை
பார்ப்பதில்லை - நீ
எனை
பார்க்கும் அந்நேரம்
நான் கண்ட
மகிழ்ச்சிகோர் எல்லை!
காதல் நலம்
காண - நம்
கண்கள்
பார்த்து பேசும் அந்த
சமரச
நிமிடங்கள் !
உன் கையில்
என் கை பதித்து
கன்னத்தில்
முத்தமிட்டு - என்
வண்ண கனவுகளை
உன் முன்னே
வர்ணம்
குறையாமல் முழங்கிவிட
நான்
காத்திருக்கும்
அந்த சில நிமிடங்கள் ...!
முத்தம் கிடைத்ததா