ஆறுதல்



என்னைச் சுற்றி
பரபரப்பாக
இயங்கிக் கொண்டிருக்கிறது
இவ்வுலகம்
இயல்பான மனம்
கொண்டயெனக்கு
பதட்டமாயிருக்கிறது.
எங்கோ தொலைந்துவிட்ட
குழந்தைபோல்
அழத்துடிக்கிறேன்
ஆறுதலுக்கோர் வார்த்தையில்லை
என்றுணர்ந்து
எதையோதேடி
கூட்டத்தோடு கூட்டமாய்
நானும்
ஓடிக்கொண்டிருக்கிறேன்.
உங்களிடம் எதாவது
வார்த்தை மிச்சமிருந்தால்
சொல்லுங்கள்
கொஞ்சம்
இளைப்பாறிக்கொள்கிறேன்.


0 Comments:

Post a Comment