காய்ச்சல் வழி நலம்

அறையின் ஒரத்தில்
கிடக்கும் போர்வைக்குள்
காய்ச்சல் உடலைத்தட்டி
கிடத்தி வைத்திருக்கிறது.

இளஞ்சுட்டு நீரில் அரை
முழு மாத்திரைகள்
எனக்கென்னவென்று 
கசப்போடு கரைந்துகொண்டிருக்கிறது.

நோவு வந்தால்தான் - என்
உடலே எனக்கு தெரியுமென்றால்
அது மாதத்திற்கு ஒரு முறை
வந்து தொலையட்டும் - அந்த
மருத்துவராவது நலமாய் இருக்கட்டும்!


0 Comments:

Post a Comment