பேரிரைச்சலுடன் பெய்த அப்பெருமழை
அதிர்ச்சியாயிருந்தது. அந்த ஒலம்
என்னை அலக்கழித்துக்
கொண்டேயிருந்தது. நீண்ட நேரம்
கழித்து நான் தூங்கிப் போனேன். விழுந்த மழைத்துளி
அதன் பயணத்தை துவங்கியிருந்தது
நீண்ட நாள் கழித்து ஏழுகடல் நூறு மலை தாண்டி வந்திருந்தாள் எனைக்காண! வெண்படல விழிசுருங்க உதட்டில் ஒரு சுழியெடுத்து முறைத்து - நொடியெடுத்து சிரித்தாள் ஏதேதோ கதைத்தாள். நானோ அவள் முகத்தையே பார்த்திருந்தேன் முற்றாய் உதட்டசைவிலே லயித்திருந்தேன். கள்ளிமுகம் சற்றும் மாறவில்லை கண்டிப்புகள் சற்றும் குறையவில்லை. நெடுங்காலமாய் அவளைத்தவிர காட்சிகளை மட்டும்தான் மாற்றிக்கொண்டிருக்கிறேன் அல்லது மாறிக்கொண்டிருக்கின்றன கனவில். நல்ல தூக்கம் போலிருக்கிறது நீண்ட நாள் கழித்து.