காதலித்துப்பார்

பார்ப்பார் தொடர்வார் பின்தொடர்வார் !
ஹாய் சொன்னால் போதும் காதல் என்பார் !
 சிரிப்பார் சிலிர்ப்பர் உயிர் பெறுவார் !
 நண்பர் அன்பெருக்கெல்லாம் ட்ரீட் தருவார் !
 உண்பார் தின்பார் நல்ல உடையெடுப்பார் !
 பார்க்கும் இடமெல்லாம் படத்தையே சித்தரிப்பார் !
 காதல் கோட்டை கட்டி கனவுலகில் பறந்திடுவார் !
 அப்பர் சுப்பரெல்லாம் தடுத்து நிற்ப்பார் !
 நண்பர் படை கொண்டு விடை பெறுவார் !
 காடு மேடு சுற்றி களைத்திடுவார் !
 காதலி புத்தி சொல்லி நிலைபெறுவார் !
 முயன்று உழைத்து வாழ்வில் முக்தி பெறுவார் !
 வாழ்க்கை வானவில்லகும் காதலித்துப்பார் !



இதயக்கனி

நிமிடத்துக்கு ஒருமுறை
             நிஜமாய் நினைக்கிறன் !
அவள் என்னை பார்க்கையில்
             அழகாய் சிரிக்கிறேன் !
காணப் பொழுதில்
               கவலையில் இருகிறேன் !
 பார்காவில்லை என்றால்
                மறுகணம் இறக்கிறேன் !

 உறவாய் இருந்து உயிரில் கலந்து
            நிலவில் இருந்து அழைக்கிறாய் !
 பிரிவாய் இருக்கும் துயரை
            நினைத்தால் இருந்தும் இறக்கிறேன் !

 பூவாய் பிறந்து கனவில் வளர்ந்து
              உயிரை ஏனோ கொல்கிறாய்!
 என் வழியில் நடந்து விழியில் இருந்து
             என் உலகை அழைத்து செல்கிறாய் !



ல்தகா சைஆ

மயிர் இழந்தால் உயிர் துறக்குமாம் கவரி மான்
               உன்னை பார்க்க என் உயிர் துடிக்கும்
                                           -ஆகவே நான் 'காதல் மான் '

 பாலும் நீரும் தனியாய் பிரிக்குமம் அன்னபறவை !
                   நாளும் பொழுதும் என் மனம் நினைப்பது
                                           -அனைத்தும் உன் உறவை !

 ஆண்புறா  இறந்தால் கல்தின்று இறக்குமாம் மாடப்புறா  !
               நீ என்னை வெறுத்தாலும்  என் காதல் சொல்லி இறப்பேன்
                                           -ஆகவே  நான் மனிதப்புறா!

 மழை வந்தால் தலை விரிதாடுமாம் தேசிய மயில்
    நீ வந்தால் என் அகம் மகிழ்ந்து ஆடும்
                                            நீ சொல்லிய பொய்யால்  !

 நிறம் வேறு என்றாலும்  குணத்தை சொன்னவுடன்
               குறிப்பை வருவது கானக்குயில் !
 குணம் வேறு என்றாலும் என் மனதுக்கவாது
               என்னை காண வருமா என் காதல் குயில் ¡


சூரிய காந்தி

என் மனமென்னும் சோலையில் 
              மகிழ்ச்சியுடன் தொடங்கி
 மலராத மொட்டாய்
            மானசீகமாய் தொடர்ந்து வரும்
என் மாண்புமிகு காதலை 
           உன்னிடம் உவமையாய் கூற விரும்பினால் !

  மனம் என்னும் மண் எடுத்து 
          விழி என்னும் விதை எடுத்து 
 காதல் இன்னும் சோலையில் 
         பூத்த சூரிய காந்தி பூ நான் !

 நீ  எத்திசையெல்லாம்  செல்கிறாயோ 
            அத்திசையெல்லாம் நித்தம் பூக்கின்ற
புத்தம் புதிய  சூரிய காந்தி பூ நான் !