என்னவளே !

கனவுகளும் வலிக்குதடி - உன்னை 
கண்மணிக்குள் நிறுத்திவிட !
உணர்வுகளும் துடிக்குதடி -இனி 
உன்னோடு கலந்து விட !

எண்ணங்களை சுமந்து வந்த 
என் நெஞ்சில் -  என்றும் 
வண்ண கனவுகளை சுமக்க வைத்து
என் வாழ்வோடு வாழ்பவளே !

கண்ணோடு கண்டவைகள் என்றும்
காட்சியோடு மறைந்துவிடும் !
கனவில் உன்னோடு கண்டவைகள் 
இறுதிவரை மூச்சாக கூட வரும் !

பண்னோடு இசை பாட 
   பாவலரும் இனி இல்லை!
உன் மடியோடு நான் தூங்க
     வேறு வரம் ஏதும் தேவை இல்லை ! 




சின்னஞ்சிறு பூக்கள்

என் தோட்டத்தில் பூத்திருக்கும் 
ஒரே ஒரு பூ மட்டும் - எனக்காக 
அழகாக பூத்திருக்கிறது !
உனக்கு கொடுப்பதற்காக !

                  ***************

கருமணி விழியோடு 
       உறவாய் கலந்தவளே ! -நாளில்
ஒரு மணி நேரமாவது 
        எனக்காக ஒதுக்கு !

                   ***************

உன்னை நினைத்து கிறுக்கி 
     வைத்தாலும் - அது 
சுருக்கி எழுதிய ஹைக்கூவாம்!

                     **************

தூங்காமல் உன்னையே 
      நினைத்து கொண்டிருந்தேன் !
நீ எப்படி தூங்குவாய் என்று !

                ***************

சிறைக்குள் சிக்கிவிட்டேன் !
   தண்டனை பற்றி 
தகவல் இல்லை ! - அதன் 
    தடங்கள் மட்டும் தென்படுகிறது !
 ஆம் ! நான் காதலிக்கிறேன் !

                    ***********                          

எதையும் மாற்றும் 
             எந்த காதல் !
இயற்கையாய் தொடரும் 
         இதய துடிப்பையும் தான் !
உன் கண் பார்க்கும் 
          இரண்டு நிமிடம் மட்டும் 
என் இதய துடிப்பு 
         இரண்டு மடங்காகும் !

         ***************

தீடிரென தீப்பற்றி கொண்டது
          என் மனக்கூரையில் !
 காரணம் தீப்பொறிகள் அல்ல !
   அவளின் அழகு விழிகள் !

 உயிரே உனக்குள்ளும்
           உயிராய் எனக்குள்ளும்
 நம் காதல் !
 



காதலித்துப்பார்

பார்ப்பார் தொடர்வார் பின்தொடர்வார் !
ஹாய் சொன்னால் போதும் காதல் என்பார் !
 சிரிப்பார் சிலிர்ப்பர் உயிர் பெறுவார் !
 நண்பர் அன்பெருக்கெல்லாம் ட்ரீட் தருவார் !
 உண்பார் தின்பார் நல்ல உடையெடுப்பார் !
 பார்க்கும் இடமெல்லாம் படத்தையே சித்தரிப்பார் !
 காதல் கோட்டை கட்டி கனவுலகில் பறந்திடுவார் !
 அப்பர் சுப்பரெல்லாம் தடுத்து நிற்ப்பார் !
 நண்பர் படை கொண்டு விடை பெறுவார் !
 காடு மேடு சுற்றி களைத்திடுவார் !
 காதலி புத்தி சொல்லி நிலைபெறுவார் !
 முயன்று உழைத்து வாழ்வில் முக்தி பெறுவார் !
 வாழ்க்கை வானவில்லகும் காதலித்துப்பார் !



இதயக்கனி

நிமிடத்துக்கு ஒருமுறை
             நிஜமாய் நினைக்கிறன் !
அவள் என்னை பார்க்கையில்
             அழகாய் சிரிக்கிறேன் !
காணப் பொழுதில்
               கவலையில் இருகிறேன் !
 பார்காவில்லை என்றால்
                மறுகணம் இறக்கிறேன் !

 உறவாய் இருந்து உயிரில் கலந்து
            நிலவில் இருந்து அழைக்கிறாய் !
 பிரிவாய் இருக்கும் துயரை
            நினைத்தால் இருந்தும் இறக்கிறேன் !

 பூவாய் பிறந்து கனவில் வளர்ந்து
              உயிரை ஏனோ கொல்கிறாய்!
 என் வழியில் நடந்து விழியில் இருந்து
             என் உலகை அழைத்து செல்கிறாய் !