கன் 'நீ'

பாரினில் பிறந்த பதுமைகளில்
புதுமையானவள் நீ !
தேரினில் உலாவரும் தேவியென
       என் கவியாய் நிற்பவள் நீ !
 கனவில் கண்ட சிலையென 
         கலைமகள் உருவானவள் நீ !
 பூமியில் பூத்த பூவில் பெண்னென
       பெயர் கொண்டவள் நீ!
 உலகில் உள்ள பொருளுக்கெல்லாம் 
        உவமயானவள் நீ !
நான் கண்ணில் கண்ட 
நொடியில் கவியானவள் நீ!

மண்ணில் வாழும் எனக்கு
உன் மனதில் வாழ 
மகுடம் சூட்டுவாய நீ ?? 



0 Comments:

Post a Comment