பாரினில்
பிறந்த பதுமைகளில்
புதுமையானவள்
நீ !
தேரினில்
உலாவரும் தேவியென
என் கவியாய் நிற்பவள் நீ !
கனவில்
கண்ட சிலையென
கலைமகள் உருவானவள் நீ !
பூமியில்
பூத்த பூவில் பெண்னென
பெயர் கொண்டவள் நீ!
உலகில் உள்ள
பொருளுக்கெல்லாம்
உவமயானவள் நீ !
நான் கண்ணில்
கண்ட
நொடியில்
கவியானவள் நீ!
மண்ணில்
வாழும் எனக்கு
உன் மனதில்
வாழ
மகுடம்
சூட்டுவாய நீ ??
0 Comments:
Post a Comment