மனதில் வையடா !

வென்று விட்ட உயிர்களெல்லாம்
மாண்டு விட்டதடா !- அவை
கொண்டு வந்த பொருட்களெல்லாம்
உலகை ஆண்டு விட்டதடா !

சண்டை போட்டு கொண்டோரல்லாம்
மரித்து விட்டனரோ ?- அவர்கள்
கொண்டு வந்த மதங்கள் மட்டும்
நிலைத்து விட்டனவோ ?

நட்பும் சுற்றமும் விரிவடைந்து
சுற்றி விட்டனவோ ? - உன்னை விட்டு
உயிர் பிரிந்தால்  உன்னை சுற்றி அழுகவோ?

வற்றி போன குளங்கள் எல்லாம்
நிரம்பி விட்டனவோ ? - சுற்றம் எல்லாம்
ஓடி வந்து கட்டி கொண்டனவோ ?

செல்வ செழிப்போடு வாழத்தான்
பட்டம் பெற்றாயோ ?-இருந்தும்
உன் நெற்றி வரை பணமிருந்தும்
இந்த வேலை பட்டினியோ ?

கண்டு கேட்ட விசயமெல்லாம்
கணக்கில் இல்லையடா ! - நீ
ஓரிடத்தில் ஒதுங்கி நின்றால்
உயர்வு இல்லையடா !

கனவு கூட காண விடா
கெட்ட உலகமடா - நீ
விழித்து கொண்டே கனவு
கண்டால் வெற்றி உனதடா !

ஆட்டும் குளிரும் வாட்டவில்லை
நான் வசதி இல்லையடா !
விதி ஆட்டும் போதும் அடங்கவில்லை
நமக்கு வயது உள்ளதடா !

உறவு கணத்த போதும் இலக்கை
வெல்வோம் கலக்கம் இல்லையடா !

நம்மை பற்றி
காட்டும் பொது காட்டி கொள்வோம்
                         கனவு உள்ளதடா !



1 Comments:

Post a Comment